காரைக்கால் துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் 
தமிழ்நாடு

காரைக்கால் துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

காரைக்கால் துறைமுகத்தில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு வியாழக்கிழமை காலை ஏற்றப்பட்டது.

DIN

காரைக்கால்: காரைக்கால் துறைமுகத்தில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு வியாழக்கிழமை காலை ஏற்றப்பட்டது.

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. இதனால் காரைக்கால் பகுதியில் மழை பெய்து வருகிறது. மழையினால் சாலைகளில் தண்ணீர் தேங்கியிருப்பதோடு, பல்வேறு குடியிருப்பு நகர்களிலும் தண்ணீர் சூழ்ந்துள்ளது.

தேங்கியிருக்கும் மழைநீரோடு வீடுகள், நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீரும் கலப்பதால் தொற்றுநோய் ஏற்படும் என்கிற அச்சமும் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. 

காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால், தொலைதூர புயல் எச்சரிக்கையை குறிக்கும் வகையில் காரைக்கால் துறைமுகத்தில் வியாழக்கிழமை 1 மணியளவில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

முன்னதாக, கடலூர் துறைமுகத்தில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு வியாழக்கிழமை ஏற்றப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

SCROLL FOR NEXT