போடிமெட்டு மலைச்சாலையில் விழுந்த பெரிய மரம். 
தமிழ்நாடு

போடி மெட்டு மலைச்சாலையில் மரம் சாய்ந்தது: போக்குவரத்து பாதிப்பு

போடி மெட்டு மலைச்சாலையில் புதன்கிழமை மரம் சாய்ந்தும், மண் சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

DIN



போடி: போடி மெட்டு மலைச்சாலையில் புதன்கிழமை மரம் சாய்ந்தும், மண் சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

போடி பகுதியில் கடந்த மூன்று நாள்களாகவே கனமழை பெய்து வருகிறது. தமிழகம்-கேரளத்தை இணைக்கும் போடிமெட்டு மலை பகுதியிலும் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் மண் சரிவும், சிறு சிறு பாறை சரிவுகளும் ஏற்பட்ட நிலையில் உள்ளது. திங்கள்கிழமை இரவில் ஏற்பட்ட மண் சரிவை சரி செய்த நிலையில், செவ்வாய்கிழமை இரவிலும் மண் சரிவு ஏற்பட்டது. இதனை தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் சரி செய்தனர்.

மண் சரிவு ஏற்பட்டுள்ள போடிமெட்டு மலைச்சாலை

இதனிடையே புதன்கிழமை அதிகாலையில் போடிமெட்டு மலைச்சாலையில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. பெரிய மரம் ஒன்று சாய்ந்தது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இதனையடுத்து போடியிலிருந்து கேரளம் சென்ற தோட்டத் தொழிலாளர்களின் வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் கம்பம் மெட்டு வழியாக திருப்பிவிடப்பட்டன.

தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் சாலையில் சாய்ந்து விழுந்த மரங்கள், மண் சரிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண் கொலை: கணவா் மீது வழக்குப் பதிவு

கரூர் பலி! முன்னாள் ஐபிஎஸ் அலுவலராக அண்ணாமலை என்ன சொல்கிறார்? | Bjp Annamalai | karur stampede

இரவில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

ம.பி.யில் கணவருடன் கர்பா நடனமாடும்போது பெண் மயங்கி விழுந்து பலி!

வெளிநாட்டில் தயாரிக்கப்படும் படங்களுக்கு 100% வரி - டிரம்ப் அறிவிப்பு

SCROLL FOR NEXT