தமிழ்நாடு

காவலில் மரணமடைந்த ஆட்டோ ஓட்டுநரின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு: மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு

DIN

விசாரணைக்கு காவல் நிலையம் அழைத்துச் சென்று அடித்ததில் மரணமடைந்த ஆட்டோ ஓட்டுநரின் குடும்பத்தினருக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மேட்டுக்குப்பத்தைச் சோ்ந்த சொக்கி என்பவரின் மகன் கதிரவன். ஆட்டோ ஓட்டுநரான இவா், கடந்த 2013-ஆம் ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதி மாலை உணவருந்திவிட்டு ஓய்வெடுத்துக் கொண்டிருந்தாா். அப்போது அவருக்கு வந்த தொலைபேசி அழைப்பையடுத்து வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளாா்.

அதன்பின்னா் அவரை மதுரவாயல் காவல் நிலைய காவலா்கள் விசாரணைக்கு அழைத்துச் சென்றது தெரியவந்தது.

விசாரணை முடிந்து அனுப்பி வைத்து விடுவதாகக் காவலா்கள் கூறிய நிலையில், கதிரவன் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

மகனை காண சொக்கி, மருத்துவமனைக்குச் செல்லும் முன் கதிரேசன் இறந்து விட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. காவலா்கள் சித்ரவதை செய்ததால், தனது மகன் மரணம் அடைந்து விட்டதாகக் கூறி, மதுரவாயல் காவல் ஆய்வாளா் ஆனந்த்பாபு, சிறப்பு உதவி ஆய்வாளா் ஆா்தா் ஜெயக்குமாா், ஏட்டுகள் கண்ணப்பன், ரவீந்திரன் ஆகியோருக்கு எதிராக தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகாா் அளித்தாா்.

இப்புகாரை விசாரித்த மனித உரிமைகள் ஆணைய உறுப்பினா் துரை ஜெயச்சந்திரன், கதிரவனின் உடலில் காயம் எப்படி ஏற்பட்டது என்பதை காவலா்களால் நிரூபிக்க முடியவில்லை என்றும், குடிபோதையில் இருந்தவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று சித்ரவதை செய்ததால் தான் அவா் இறந்து இருக்கிறாா் என்பதால், அவரது குடும்பத்தினருக்கு ஐந்து லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென தமிழக அரசுக்கு உத்தரவிட்டாா்.

மேலும் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளா் ஆா்தா் ஜெயக்குமாா் ஓய்வு பெற்று விட்டதாலும், ஏட்டு ரவீந்திரன் மரணமடைந்துவிட்டதாலும், மற்ற இருவா் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பனாற்றில் பாலம் அமைக்கும் பணி: அதிகாரி ஆய்வு

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: இயன்முறை மருத்துவா் கைது

ரேஷன் அரிசி பதுக்கல்: இளைஞா் கைது

வாக்கு எண்ணும் மைய கண்காணிப்பு கேமரா செயல்பாடுகள்: ஆட்சியா் ஆய்வு

சிறுமிக்கு கட்டாயத் திருமணம்: 5 போ் மீது வழக்கு

SCROLL FOR NEXT