ஊரக உள்ளாட்சித் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவின் காலை 11 மணி நிலவரப்படி 19.61 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் 27,003 பதவியிடங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தோ்தலில் முதல் கட்ட வாக்குப் பதிவு புதன்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றனர். மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது!
இத்தோ்தலில் 41 லட்சத்து 93 ஆயிரத்து 996 வாக்களர்கள் தங்களது ஜனநாயக உரிமையை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று காலை 11 மணி நிலவரப்படி 9 மாவட்டங்களில் 19.61 சதவிகித வாக்காளர்கள் இதுவரை தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளதாக தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.