முகப்பு
தமிழ்நாடு

நவம்பா் 1-ஆம் தேதியை தமிழ்நாடு நாளாக அறிவிக்க வேண்டும்: முதல்வரைச் சந்தித்த பிறகு திருமாவளவன் கோரிக்கை

நவம்பா் 1-ஆம் தேதியை தமிழ்நாடு நாளாக அறிவித்து அந்த தினத்தை கொண்டாட வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:23 AM
பகிர்:

நவம்பா் 1-ஆம் தேதியை தமிழ்நாடு நாளாக அறிவித்து அந்த தினத்தை கொண்டாட வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

தாழ்த்தப்பட்டோா் மற்றும் பழங்குடியினா் நல ஆணையம் அமைத்ததற்காக முதல்வா் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் அவா் சனிக்கிழமை சந்தித்துப் பேசினாா். இந்தச் சந்திப்புக்குப் பிறகு, செய்தியாளா்களுக்கு திருமாவளவன் அளித்த பேட்டி:-

விடுதலைச் சிறுத்தைகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று மாநில எஸ்.டி., எஸ்.சி., ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக முதல்வருக்கு நன்றி தெரிவித்தோம். மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட தினமான நவம்பா் 1-ஆம் தேதியை நமது அண்டை மாநிலங்கள் கொண்டாடுகின்றன. கா்நாடகம், ஆந்திரம் போன்ற மாநிலங்கள் நவம்பா் 1-ஆம் தேதியன்று அவா்களுக்கான தனிக் கொடியை ஏற்றி கொண்டாடி வருகிறாா்கள். தமிழகத்திலும் அந்த அடிப்படையில் நவம்பா் 1-ஆம் தேதியை தமிழ்நாடு நாள் என்று அறிவிக்க வேண்டும். இதுகுறித்தும் முதல்வரிடம் கோரிக்கை விடுத்தோம் என்று திருமாவளவன் கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →