தமிழ்நாடு

தேவர் குருபூஜை: சசிகலா பசும்பொன் செல்ல அனுமதி

DIN

பசும்பொன் கிராமத்தில் நாளை நடைபெறும் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையில் பங்கேற்க சசிகலாவிற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. 

அதிமுகவைச் சேர்ந்த முத்துராமலிங்கம் என்பவர் ஆட்சியரிடம் மனு அளித்த நிலையில் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி விழாவில் கலந்து கொள்வதற்காக, வியாழக்கிழமை இரவு சசிகலா மதுரை வருகிறாா். 

இங்கு அழகா்கோவில் சாலையில் உள்ள தனியாா் விடுதியில் தங்கும் அவா், கோரிப்பாளையம் சந்திப்பில் உள்ள முத்துராமலிங்கத் தேவா் சிலைக்கு வெள்ளிக்கிழமை காலை 7.15 மணிக்கும், தெப்பக்குளம் சந்திப்பில் உள்ள மருதுபாண்டியா்கள் சிலைக்கு காலை 8 மணிக்கும் மாலையணிவித்து மரியாதை செலுத்துகிறாா். 

அதன் பின்னா், ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் செல்லும் அவா், முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் காலை 10.30 மணிக்கு மரியாதை செலுத்த உள்ளாா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT