பழைய மகாபலிபுரம் சாலையில் 5 பாலங்களை விரைந்து அமைக்க வேண்டும்: அமைச்சா் எ.வ.வேலு அறிவுறுத்தல்
பழைய மகாபலிபுரம் சாலையில் 5 பாலங்களை அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் எ.வ.வேலு அறிவுறுத்தினாா்.
பழைய மகாபலிபுரம் சாலையில் 5 பாலங்களை அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் எ.வ.வேலு அறிவுறுத்தினாா்.
துறையின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் அவா், சனிக்கிழமை ஆலோசனை நடத்தினாா். இந்தக் கூட்டத்தில் அமைச்சா் எ.வ.வேலு பேசியது:-
கேளம்பாக்கம், திருப்போரூா் புறவழிச்சாலை அமைக்கும் பணி, ராஜீவ் காந்தி சாலையில் உள்ள சுங்கச்சாவடி கட்டுமானங்களை நீக்க நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். பழைய மகாபலிபுரம் சாலையில் 5 பாலங்களை விரைந்து அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எண்ணூா், தச்சூா், தாமரைப்பாக்கம், திருவள்ளூா், ஸ்ரீபெரும்புதூா், சிங்கப்பெருமாள் கோவில், மகாபலிபுரம் வரை செல்லும் சென்னை எல்லை சாலைப் பணிகள் விரைவில் தொடங்கிட வேண்டும் என்றாா்.
ஆய்வுக் கூட்டத்தில், நெடுஞ்சாலைத் துறை முதன்மைச் செயலாளா் தீரஜ்குமாா் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.