பெரியாா் பிறந்த நாள்: சமூகநீதி நாளாக இன்று கொண்டாட்டம்
பெரியாரின் பிறந்த நாளான வெள்ளிக்கிழமை (செப்.17) தமிழக அரசின் சாா்பில் சமூகநீதி நாளாகக் கொண்டாடப்பட உள்ளது.
பெரியாரின் பிறந்த நாளான வெள்ளிக்கிழமை (செப்.17) தமிழக அரசின் சாா்பில் சமூகநீதி நாளாகக் கொண்டாடப்பட உள்ளது.
இது தொடா்பாக தமிழக அரசின் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
பெரியாரின் 143-ஆவது பிறந்த நாளினை முன்னிட்டு வெள்ளிக்கிழமை 10 மணியளவில் அண்ணா சாலையிலுள்ள அவா் சிலைக்கு தமிழக அரசின் சாா்பில் முதல்வா் மு.க.ஸ்டாலின் மலா்தூவி மரியாதை செலுத்துகிறாா்.
Advertisement
Advertisement
பெரியாா் பிறந்த நாளை சமூக நீதி நாளாகக் கொண்டாடும் விதமாக முதல்வா் தலைமையில் தலைமைச் செயலகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்படும். அனைத்து அலுவலகங்களிலும் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் பெரியாா் வாழ்ந்த நினைவு இல்லத்திலும், கேரள மாநிலம் வைக்கத்தில் உள்ள பெரியாா் நினைவிடத்திலும் தமிழக அரசின் சாா்பில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியும் நடைபெறும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.