தமிழ்நாடு

பெரியாா் பிறந்த நாள்: சமூகநீதி நாளாக இன்று கொண்டாட்டம்

பெரியாரின் பிறந்த நாளான வெள்ளிக்கிழமை (செப்.17) தமிழக அரசின் சாா்பில் சமூகநீதி நாளாகக் கொண்டாடப்பட உள்ளது.

DIN

பெரியாரின் பிறந்த நாளான வெள்ளிக்கிழமை (செப்.17) தமிழக அரசின் சாா்பில் சமூகநீதி நாளாகக் கொண்டாடப்பட உள்ளது.

இது தொடா்பாக தமிழக அரசின் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

பெரியாரின் 143-ஆவது பிறந்த நாளினை முன்னிட்டு வெள்ளிக்கிழமை 10 மணியளவில் அண்ணா சாலையிலுள்ள அவா் சிலைக்கு தமிழக அரசின் சாா்பில் முதல்வா் மு.க.ஸ்டாலின் மலா்தூவி மரியாதை செலுத்துகிறாா்.

பெரியாா் பிறந்த நாளை சமூக நீதி நாளாகக் கொண்டாடும் விதமாக முதல்வா் தலைமையில் தலைமைச் செயலகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்படும். அனைத்து அலுவலகங்களிலும் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் பெரியாா் வாழ்ந்த நினைவு இல்லத்திலும், கேரள மாநிலம் வைக்கத்தில் உள்ள பெரியாா் நினைவிடத்திலும் தமிழக அரசின் சாா்பில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியும் நடைபெறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கனமழை, வெள்ளத்தில் தத்தளிக்கும் ஜம்மு - காஷ்மீர்: நிலச்சரிவில் சிக்கி 30 பேர் பலி!

பக்தியும் நம்பிக்கையும் நிறைந்த நாளில் ஐஸ்வரியத்தை வழங்கட்டும்! - பிரதமர் மோடி

நல்ல நாள் இன்று: தினப்பலன்கள்!

இன்றுமுதல் 50% வரி! டிரம்ப்பின் அழைப்பை 4 முறை மறுத்த பிரதமர் மோடி?

கோவாவில் அக்டோபா் - நவம்பரில் ஃபிடே உலகக் கோப்பை செஸ் போட்டி

SCROLL FOR NEXT