முகப்பு
தமிழ்நாடு

சென்னை விமான நிலையத்தில் 390 கிராம் தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் 390  தங்கம், மின்னணுப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.  

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:10 AM
பகிர்:

சென்னை விமான நிலையத்தில் 390  தங்கம், மின்னணுப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 
உளவுப் பிரிவினரிடமிருந்து கிடைத்தத் தகவலின் அடிப்படையில் நேற்றிரவு 9 மணிக்கு ஏர் அரேபியா ஜி9-473 என்ற விமானத்தில் சார்ஜாவில் இருந்து பயணம் செய்த 53 வயது ஆண் பயணியை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். 
அவரை சோதனையிட்டதில் 80 கிராம் எடையுள்ள தங்க சங்கிலியை அவரது பேண்ட் பாக்கெட்டில் மறைத்து எடுத்து வந்திருப்பது தெரியவந்தது. மேலும் ரூ. 16,30,590 மதிப்பில் 310 கிராம் எடையிலான தங்கத்தை தமது உடலில் அவர் மறைத்து எடுத்து வந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. 

இது தவிர, அவர் கொண்டு வந்திருந்த பையில் ரூ. 6,00,200 மதிப்பிலான மின்னணு பொருள்களையும் முறைகேடாக மறைத்து எடுத்து வந்திருப்பது தெரியவந்தது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ. 22.31 லட்சம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இதைத்தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்ததோடு சம்பந்தப்பட்டோரையும் கைது அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →