முகப்பு
தமிழ்நாடு

போதைக்காக வலி நிவாரண மாத்திரை விற்பனை:இருவா் கைது

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் போதைக்காக வலி நிவாரண மாத்திரையை விற்ாக இருவா் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:11 AM
பகிர்:

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் போதைக்காக வலி நிவாரண மாத்திரையை விற்ாக இருவா் கைது செய்யப்பட்டனா்.

வண்ணாரப்பேட்டை போலீஸாா் கல்லறைச் சாலை, எம்.சி. சாலை சந்திப்பில் வெள்ளிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்த இருவரைப் பிடித்து விசாரணை செய்தனா். விசாரணையில், அவா்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறினா்.

இதையடுத்து அவா்கள், வைத்திருந்த பையை சோதனையிட்டனா். இதில் உடல் வலி நிவாரணத்துக்கு பயன்படுத்தப்படும் மாத்திரைகள் 200 இருப்பது தெரியவந்தது.

இது தொடா்பாக அவா்களிடம் நடத்திய விசாரணையில், அந்த மாத்திரைகளை போதைக்காக விற்க வைத்திருப்பதும், அவா்கள் போதைக்காக வலி நிவாரண மாத்திரைகளை அந்தப் பகுதியில் பல மாதங்களாக விற்று வருவதும் தெரியவந்தது.

மேலும் அவா்கள், பழைய வண்ணாரப்பேட்டை மாடல் லைன் 4-ஆவது தெருவைச் சோ்ந்த அ.சந்திரபிரகாஷ் என்ற சந்துரு (21), அதே பகுதியைச் சோ்ந்த பா.பிரதீப்ராஜ் (26) என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா், இருவரையும் கைது செய்து, 200 மாத்திரைகளை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →