முகப்பு
தமிழ்நாடு

14 மாவட்டங்களில் கனமழை தொடரும்: வானிலை மையம்

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் அடுத்த 2 நாள்களுக்கு கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:13 AM
14 மாவட்டங்களில் கனமழை தொடரும்
பகிர்:

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் அடுத்த 2 நாள்களுக்கு கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 2 நாள்களுக்கு நீலகிரி, கோவை, சேலம், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, திண்டுக்கல், தேனி, திருப்பத்தூர், வேலூர், திருவண்னாமலை, திருச்சி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும், செப்டம்பர் 26 முதல் 28 வரை தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →