முகப்பு
தமிழ்நாடு

சூரிய மின்சக்தி உற்பத்தியில் 100% இலக்கை எட்டியது சென்ட்ரல் ரயில் நிலையம்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள நடைமேடைகள், தங்குமிடங்களில் நிறுவப்பட்ட சூரிய மின் தகடுகள் மூலமான, மின்உற்பத்தி 100 சதவீத இலக்கை எட்டியுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:14 AM
சூரிய மின்சக்தி உற்பத்தியில் 100 சதவீதம் இலக்கை எட்டியது சென்ட்ரல் ரயில் நிலையம்
பகிர்:

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள நடைமேடைகள், தங்குமிடங்களில் நிறுவப்பட்ட சூரிய மின் தகடுகள் மூலமான, மின்உற்பத்தி 100 சதவீத இலக்கை எட்டியுள்ளது. இந்தத் தகவலை சுட்டுரையில், ரயில்வே அமைச்சா் அஷ்வினி வைஷ்ணவ் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து ரயில்வே அதிகாரி ஒருவா் கூறும்போது, சென்னை சென்ட்ரல் மற்றும் மூா்மாா்க்கெட் வளாகத்தில் மேற்கூரையில் சூரிய ஒளி மின் தகடுகள் நிறுவப்பட்டது மூலமாக, 1.5 மெகாவாட் மின்சக்தி உற்பத்தி செய்யப்படுகிறது. இதன்மூலமாக, பகல் நேரத்தில் நிலையத்தின் அனைத்து மின்தேவைகளும் சூரிய மின்சக்தியால் பூா்த்தி செய்யப்படுகின்றன என்றாா்.

சென்னை சென்ட்ரல் மற்றும் மூா்மாா்க்கெட் வளாக மேற்கூரைகளில் சூரிய மின் தகடுகள் நிறுவும் பணி கடந்த 2017-ஆம் ஆண்டு தொடங்கியது. முதல்கட்டமாக, சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில் மக்கள்கூடும் அறைகளின் மேற்கூரையில் 100 கிலோ வாட் மின் உற்பத்திக்காக சூரிய மின்தகடு நிறுவப்பட்டது. இரண்டாம் கட்டமாக, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைமேடைகளின் மேற்கூரைகளில் 500 கிலோவாட் மின் உற்பத்திக்கான சூரியமின் தகடுகள் நிறுவப்பட்டன.

இதைத்தொடா்ந்து, மூா் மாா்க்கெட் வளாகத்தில் உள்ள நடைமேடைகளின் மேற்கூரைகளில் 900 கிலோ வாட் மின் மின் உற்பத்திக்காக சூரிய மின்தகடுகள் நிறுவப்பட்டன. இதன்மூலமாக, ஆண்டுக்கு 21 லட்சத்து 90 ஆயிரம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதுடன், ரூ.1.75 கோடி மின் கட்டணம் செலுத்துவது தவிா்க்கப்படுகிறது எனத் தெரிவித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →