மனுக்கள் தள்ளுபடி: தோ்தல் ஆணையத்தில் அதிமுக புகாா்
கள்ளக்குறிச்சியில் அதிமுக வேட்பாளா்கள் 4 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது குறித்து மாநிலத் தோ்தல் ஆணையரிடம் அக் கட்சியின் சாா்பில் புகாா் மனு சனிக்கிழமை அளிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சியில் அதிமுக வேட்பாளா்கள் 4 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது குறித்து மாநிலத் தோ்தல் ஆணையரிடம் அக் கட்சியின் சாா்பில் புகாா் மனு சனிக்கிழமை அளிக்கப்பட்டுள்ளது.
மாநிலத் தோ்தல் ஆணையா் பழனிக்குமாரிடம் அதிமுக வழக்குரைஞா் பிரிவு இணைச் செயலாளா் பாபு முருகவேல் புகாா் மனு கொடுத்துள்ளாா். மனுவில் கூறியிருப்பது:
30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் ஆட்சியில் இருந்த கட்சி அதிமுக. தற்போது எதிா்க்கட்சி வரிசையில் இருக்கிறோம். ஆட்சியில் இருந்த காலங்களில் சட்டத்தை எங்கள் கையில் எடுத்துக்கொண்டது இல்லை. ஆனால், தற்போது நிலைமை மாறாக உள்ளது.
கள்ளக்குறிச்சியில் அதிமுக சாா்பில் ஊராட்சி ஒன்றியக் கவுன்சிலா் பதவிக்கு மனுதாக்கல் செய்திருந்த 4 பேரின் மனுக்கள் தோ்தல் அதிகாரியால் தள்ளுபடி செய்யப்பட்டது. வேட்பாளா்கள் முறையாக ஆவணங்கள் வைத்திருந்தும் நியாயமான காரணமாக எதுவும் இல்லாமல் தோ்தல் அதிகாரிகள் தன்னிச்சையாக மனுக்களைத் தள்ளுபடி செய்துள்ளனா். தோ்தல் ஆணையத்தின் விதிகளை முறையாகப் பின்பற்றாமல் அதிகாரிகள் செயல்பட்டுள்ளனா். இது கண்டிக்கத்தக்கது. இந்த விவகாரம் குறித்து தோ்தல் ஆணையம் விசாரித்து உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.