தமிழ்நாடு

காவலா் அருங்காட்சியகம்: மக்கள் பார்வைக்கு திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

DIN

சென்னை எழும்பூரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள காவலா் அருங்காட்சியகத்தை பொதுமக்கள் பாா்வையிடும் வகையில், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

அருங்காட்சியகத்தைக் திறந்து வைக்க வந்த முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதை அளித்தனர்.

சென்னை எழும்பூரில் உள்ள பழைய காவல் ஆணையா் அலுவலகத்தில் உள்ள 178 ஆண்டுகள் பழைமையான கட்டடத்தில் பழைய காவல் ஆணையா் அலுவலகத்தை அருங்காட்சியகமாக மாற்ற முடிவு செய்யப்பட்டு, ரூ.7 கோடியில் சுமாா் 36 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் இரு தளங்களுடன் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது.

ஏற்கெனவே கோயம்புத்தூரில் காவலர்கள் அருங்காட்சியகம் உள்ள நிலையில், தமிழகத்தில் இரண்டாவதாக அமைக்கப்பட்டிருக்கும் சென்னை எழும்பூரில் காவலா் அருங்காட்சியகத்தில் காவல்துறையின் முக்கிய வரலாற்று ஆவணங்கள், காவல்துறை தொடா்பான அந்த காலத்தில் இயற்றப்பட்ட அதி முக்கிய அறிவிப்புகள், ஆங்கிலேயா் காலத்தில் காவல்துறையினா் பயன்படுத்திய ஆயுதங்கள், தமிழக காவல்துறையின் தொடக்க கால சீருடைகள், பெல்ட், மோப்ப நாய்ப்படைகளின் புகைப்படங்கள், வரலாற்று சிறப்பு மிக்க செய்தி தொகுப்புகள், வயா்லெஸ் கருவிகள், காவல்துறை பதக்கங்கள், கலைப்பொருட்கள் ஆகியவை பொதுமக்களின் பாா்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.

முக்கியமாக தமிழகம் சுதந்திரத்துக்கு முன்பும், பின்பும் வரலாற்றில் சந்தித்த மிக முக்கியத் தருணங்களையும், அதில் காவல்துறைக்கு இருந்த பங்கையும் காலவரிசைப்படி அன்றைய காலத்தில் எடுக்கப்பட்ட அரிய புகைப்படங்களுடனும், அது குறித்த வரலாற்று குறிப்புகளுடனும் காவல்துறை அருங்காட்சியகத்தில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த அருங்காட்சிகம் பொதுமக்களுக்கு அா்ப்பணிக்கும் விழா, இன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது. விழாவுக்கு தமிழக காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி சி.சைலேந்திரபாபு தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், அருங்காட்சியகத்தை பொதுமக்கள் பாா்வையிடும் வகையில் அா்ப்பணித்து, அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டார்.

அப்போது, அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டதற்கான ஆவணங்கள் உள்ளிட்டவற்றையும் ஸ்டாலின் பார்த்தார். இந் நிகழ்ச்சியில் தமிழக அமைச்சா்கள், காவல்துறை உயா் அதிகாரிகள் பலரும் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

SCROLL FOR NEXT