முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் மேலும் 11 பேருக்கு ஒமைக்ரான் உறுதி

தமிழகத்தில் மேலும் 11 பேருக்கு ஒமைக்ரான் கரோனா வகை உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

Updated On : 28 டிசம்பர், 2021 at 4:54 PM
தமிழகத்தில் மேலும் 11 பேருக்கு ஒமைக்ரான் உறுதி
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:17 AM

தமிழகத்தில் மேலும் 11 பேருக்கு ஒமைக்ரான் கரோனா வகை உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

ஏற்கனவே 34 பேருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் மொத்த பாதிப்பு 45ஆக அதிகரித்துள்ளது.

மேலும், ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்ட 11 பேரில் ஒருவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும், சென்னையில் 7 பேர், திருவண்ணாமலை, கன்னியாகுமரி, திருவாரூரில் தலா ஒருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.

முன்னதாக தமிழகத்தில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டிருந்த 34 பேரில் 16 பேர் குணமடைந்து வீடு திரும்பியதாக இன்று காலை மத்திய சுகாதாரத்துறை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.