முகப்பு
தமிழ்நாடு

ஊரடங்கை நீட்டித்துக்கொண்டே இருக்க முடியாது; கரோனாவிற்கு விரைவில் முற்றுப்புள்ளி: ஸ்டாலின்

மக்களை அச்சுறுத்தும் வகையில் பரவி வரும் கரோனாவிற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:21 PM
மு.க.ஸ்டாலின்
பகிர்:

மக்களை அச்சுறுத்தும் வகையில் பரவி வரும் கரோனாவிற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக சுட்டுரையில் அவர் பதிவிட்டுள்ள விடியோவில் தெரிவித்துள்ளதாவது,

மக்கள் கட்டுப்பாடுகளை முறையாகக் கடைப்பிடித்தால் ஊரடங்கிற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைத்துவிடலாம்.

கரோனாவால் அடித்தட்டு மக்களின் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது. அதற்காக மாதம் 2 ஆயிரம் வீதம் இரு மாதங்களுக்கு 4 ஆயிரம் வழங்கப்படுகிறது. 13 பொருள்கள் அடங்கிய தொகுப்பும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் ஊரடங்கை நீட்டிக்கொண்டே செல்ல முடியாது. கரோனா பரவலுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

மக்களை காக்கும் மகத்தான பணியில் என்னை நான் ஒப்படைத்துள்ளேன். கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கையே தேவை. தமிழக அரசு மக்களுக்கு நம்பிக்கையூட்டும் அரசாக செயல்படும் என்று தெரிவித்தார். 

முழு கட்டுரையைப் படிக்க →