முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணை: உபரிநீர் திறப்பு 35,000 கனஅடியாக அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கான நீரவரத்து வினாடிக்கு 28 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ள நிலையில், அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு வினாடிக்கு 35,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:34 AM
மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு வினாடிக்கு 35,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 
பகிர்:

மேட்டூர் அணைக்கான நீரவரத்து வினாடிக்கு 28 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ள நிலையில், அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு வினாடிக்கு 35,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

மேட்டூர் அணையின் 88 ஆண்டுகால வரலாற்றில் 41 ஆவது ஆண்டாக அணை நிரப்பியுள்ளது. சனிக்கிழமை காலை நிலவரப்படி, அணையின் முழு கொள்ளளவான 120 அடியாக உயர்ந்தது. 

அணைக்கு வினாடிக்கு 24 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிந்த நிலையில், தற்போது வினாடிக்கு 28 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், அணைநீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 17,000 கன அடி நீரும், 16 கண் பாலம் வழியாக வினாடிக்கு 18,000 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. 

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 35 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →