முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் மேலும் 22 பேருக்கு கரோனா

தமிழகத்தில் இன்று மேலும் 22 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:55 AM
பகிர்:

தமிழகத்தில் இன்று மேலும் 22 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் இன்று 20,971 மாதிரிகள் கரோனா பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அதில் 22 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

இதன் மூலம் மொத்த பாதிப்பு 34 லட்சத்து 53 ஆயிரத்து 033- ஆக அதிகரித்துள்ளது. அதேவேளையில் 32 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 237 போ் சிகிச்சையில் உள்ளனா். இன்று உயிரிழப்பு ஏதுமில்லை. கரோனா தொற்றுக்கு இதுவரை 38 ஆயிரத்து 25 போ் உயிரிழந்துள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

முழு கட்டுரையைப் படிக்க →