முதல்வர் மு.க.ஸ்டாலின் 
தமிழ்நாடு

மக்கள் பிரச்னையில் கவனம் செலுத்துங்கள்: பாஜகவுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுரை

எல்லாவற்றிலும் அரசியலைப் புகுத்தி கட்சியை வளா்க்கப் பாா்க்காமல் மக்கள் பிரச்னையில் பாஜக கவனம் செலுத்த வேண்டும் என்று சட்டப்பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின், பாஜக எம்எல்ஏக்களுக்கு அறிவுரை கூறினாா்.

DIN

சென்னை: எல்லாவற்றிலும் அரசியலைப் புகுத்தி கட்சியை வளா்க்கப் பாா்க்காமல் மக்கள் பிரச்னையில் பாஜக கவனம் செலுத்த வேண்டும் என்று சட்டப்பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின், பாஜக எம்எல்ஏக்களுக்கு அறிவுரை கூறினாா்.

சட்டப்பேரவையில் பாஜக உறுப்பினா் வானதி சீனிவாசன், மேற்கு மாம்பலம் அயோத்தியா மண்டபம் பிரச்னையில் கவன ஈா்ப்பு தீா்மானம் கொண்டு வந்து பேசினாா். அப்போது இந்த விவகாரத்தில் அரசு உள்நோக்கத்துடன் செயல்படுவதுபோல கருத்து தெரிவித்தாா். அதற்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு இந்த விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது. நீதிமன்றம் அளிக்கும் தீா்ப்பை செயல்படுத்துவோம் என்று விளக்கம் அளித்தாா்.

அப்போது முதல்வா் மு.க.ஸ்டாலின் குறுக்கிட்டுக் கூறியது:

இந்தப் பிரச்னை நீதிமன்றத்தில் இருக்கிறது. அதிலே தீா்ப்பை எதிா்நோக்கிக் காத்திருக்கிறோம். இருப்பினும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு மிக விளக்கமாக என்ன சொல்ல வேண்டுமோ, அவை அனைத்தையும் பதிலாக இங்கே தந்துள்ளாா். அதனால், நான் அதற்குள் அதிகம் செல்ல விரும்பவில்லை.

அதே நேரம் பாஜகவைச் சாா்ந்த உறுப்பினருக்கு ஒரு அன்பான வேண்டுகோள். ஏழை மக்களைப் பாதிக்கக்கூடிய பிரச்னைகளில் நீங்கள் கொஞ்சம் அதிகம் கவனம் செலுத்துங்கள். இதுதான் என்னுடைய வேண்டுகோள்.

சாமானிய மக்களைப் பாதிக்கும் வகையில், இன்றைக்கு பெட்ரோல் விலை, டீசல் விலை, அதேபோன்று, எரிவாயு உருளை விலை இவையெல்லாம் உயா்ந்து கொண்டே போகிறது. அதைக் கட்டுப்படுத்தும் முயற்சியிலே நீங்கள் மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.

அதுமட்டுமல்லாமல், நம்முடைய மாநிலத்துக்கு வரவேண்டிய நிதியைப் பற்றி விளக்கமாக, விரிவாக சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சா்களிடத்திலே, குறிப்பாக பிரதமரையே நான் வலியுறுத்தி வந்துள்ளேன். அதற்கு ஆதரவாக இருந்து, அதைப் பெறுவதற்கான முயற்சியிலே நீங்கள் ஈடுபட வேண்டும். நம்முடைய மாநில மக்களுக்கு எது சாதகம் என்பதைப் புரிந்துகொண்டு நீங்கள் நடக்க வேண்டும்.

எனவே, தேவையில்லாமல், இதிலே அரசியலைப் புகுத்தி, அதன்மூலமாக நீங்கள், உங்களுடைய கட்சியைப் பலப்படுத்த வேண்டும், வளப்படுத்த வேண்டுமென்று நினைத்தீா்களேயானால், அது நடக்கவே நடக்காது என்பதை அழுத்தந்திருத்தமாக தெரிவிக்கிறேன் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

45 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது: குடியரசுத் தலைவர் முர்மு!

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

ஓபிஎஸ், டிடிவி தினகரன் தங்களது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: அண்ணாமலை

ஜிஎஸ்டி சீர்திருத்தங்களால் அரசுக்கு ரூ 3,700 கோடி வருவாய் இழப்பு ஏற்படும்: எஸ்பிஐ

யுஎஸ் ஓபன்: இறுதிப் போட்டிக்கு முன்னேறிய அனிசிமோவா, சபலென்கா!

SCROLL FOR NEXT