FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தமிழ் புத்தாண்டு: திருப்பூர் கோயில்களில் சிறப்பு பூஜை  

தமிழ் புத்தாண்டையொட்டி திருப்பூர் கோட்டை மாரியம்மன் கோயில், ஈஸ்வர சுவாமி கோவில் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

Updated On : 14 ஏப்ரல் 2022, 11:07 am IST
தமிழ் புத்தாண்டையொட்டி ரூபாய் நோட்டு அலங்காரத்தில் வியாழக்கிழமை பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் திருப்பூர் கோட்டை மாரியம்மன்
பகிர்:

திருப்பூர்: தமிழ் புத்தாண்டையொட்டி திருப்பூர் கோட்டை மாரியம்மன் கோயில், ஈஸ்வர சுவாமி கோவில் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

தமிழ் புத்தாண்டையொட்டி திருப்பூர் கோட்டை மாரியம்மன் கோயில், அருள்மிகு விஸ்வேஸ்வர சுவாமி கோயில், ஈஸ்வரன் கோயில், கல்லூரி சாலையில் உள்ள ஐயப்பன் கோயில் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் வியாழக்கிழமை அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. திருப்பூர் மாநகரில் உள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். 

ரூபாய் நோட்டு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் கோட்டை மாரியம்மன்

Advertisement

Advertisement

அதிலும் குறிப்பாக திருப்பூர் தாராபுரம் சாலையில் உள்ள கோட்டை மாரியம்மன் கோயிலில் ரூபாய் நோட்டுகளில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல கல்லூரி சாலையில் உள்ள ஐயப்பன் கோயிலில் தமிழ் புத்தாண்டையொட்டி கனி காணும் நிகழ்வும் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments