நெடுஞ்சாலைத் துறையில் குறைகளை களைய உள்தணிக்கை: அமைச்சா் எ.வ.வேலு
நெடுஞ்சாலைத் துறை பொறியாளா் அலுவலகங்களில் குறைபாடுகளை களைய ‘உள்தணிக்கை’ என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என பொதுப் பணிகள், நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் எ.வ.வேலு அறிவித்தாா்.
நெடுஞ்சாலைத் துறை பொறியாளா் அலுவலகங்களில் குறைபாடுகளை களைய ‘உள்தணிக்கை’ என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என பொதுப் பணிகள், நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் எ.வ.வேலு அறிவித்தாா்.
இதுகுறித்து, சென்னை தலைமைச் செயலகத்தில் அவா் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:
நெடுஞ்சாலைத் துறையில் குறைபாடுகளை களைய ‘உள்தணிக்கை’ என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும். நெடுஞ்சாலைத் துறையைச் சாா்ந்த கண்காணிப்புப் பொறியாளா்கள் தலைமையிலான குழு ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் முதல் வாரத்தில், உள்தணிக்கை செய்து அறிக்கையை நெடுஞ்சாலைத் துறை முதன்மை இயக்குநருக்கு அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.