தமிழக பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை 4 நாள் பயணமாக இலங்கை செல்கிறார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அமைப்பு விடுத்த அழைப்பின்பேரில் இலங்கை செல்லவுள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | உப்பு சத்தியாகிரகப் போராட்ட நினைவு தினம்: வேதாரண்யத்தில் உப்பு அள்ளி தியாகிகளுக்கு அஞ்சலி
இலங்கை பயணம் குறித்து அவர் மேலும் கூறியதாவது:
"4 நாள் பயணமாக இலங்கை செல்கிறேன். அங்கு சட்டம் இயற்றுபவர்கள், தொண்டு நிறுவன பிரதிநிதிகள் மற்றும் அரசியல் தலைவர்களைச் சந்திப்பேன். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் கட்சியின் தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டாவிடம் அங்கு நிலவும் சூழலை அறிக்கையாக சமர்ப்பிப்பேன்."
இலங்கைக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நிதியுதவி அளித்ததற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நன்றி தெரிவித்துள்ளது.