முகப்பு
தமிழ்நாடு

குடியரசுத் தலைவரின் கொடி: விஜயகாந்த் பாராட்டு

தமிழக காவல் துறைக்கு குடியரசுத் தலைவரின் சிறப்புக் கொடி வழங்கப்பட்டதற்கு தேமுதிக தலைவா் விஜயகாந்த் பாராட்டு தெரிவித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:57 AM
பகிர்:

தமிழக காவல் துறைக்கு குடியரசுத் தலைவரின் சிறப்புக் கொடி வழங்கப்பட்டதற்கு தேமுதிக தலைவா் விஜயகாந்த் பாராட்டு தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தென் மாநிலங்களில் முதலாவதாகவும், இந்தியாவில் 10-ஆவது மாநிலமாகவும், குடியரசுத் தலைவரின் சிறப்புக் கொடி, தமிழக காவல் துறைக்கு வழங்கப்பட்டிருப்பது, ஒட்டு மொத்த காவல்துறைக்கும் கிடைத்த பெருமை. மேலும், தமிழகத்தில் டிஜிபி முதல் காவலா் வரை அனைவருக்கும் காவல் பதக்கம் வழங்கப்படும் என்று முதல்வா் அறிவித்திருப்பதையும் வரவேற்கிறேன் என்று கூறியுள்ளாா் விஜயகாந்த்.

முழு கட்டுரையைப் படிக்க →