தமிழ்நாடு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக குறையத் தொடங்கியதால் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு 1,80,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. 

DIN

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக குறையத் தொடங்கியதால் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு 1,80,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. 

காவிரியில் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக மேட்டூர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. கடந்த 20 நாள்களில் அணைக்கு 132 டி.எம்.சி. தண்ணீர் வந்துள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி 100 டி.எம்.சி வெள்ளநீர் வெளியேற்றப்பட்டுள்ளது.

மேட்டூர் அணைக்கு இன்று வெள்ளிக்கிழமை வினாடிக்கு 2,40,000 கனஅடி வரை நீர்வரத்து அதிகரிக்கும் என எதிர்பாத்த நிலையில் காவிரியின் நீர்ப் பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழையின் அளவு சற்று குறைந்தது. அதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் சற்று குறைந்து உள்ளது.

வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு நீர்வரத்து குறைந்துள்ளதை அடுத்து அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு வினாடிக்கு 2,10,000 கன அடியிலிருந்து வினாடிக்கு 1,80,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. 

அணை மின்நிலையம் மற்றும் சுரங்க மின்நிலையங்கள் வழியாக வினாடிக்கு 23,000 கனஅடி வீதமும், 16 கண் பாலம் வழியாக வினாடிக்கு 1,57,000 கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இப்படியும் நடக்கிறதா? அரசுத் திட்டங்கள் பெயரில் பண மோசடி!

“Karur பற்றிய கேள்விகளைத் தவிர்க்கலாம்!” செந்தில் பாலாஜி காட்டம்! | DMK | TVK | VIJAY

மோலிவுட்டிலிருந்து... அஸ்வதி!

சொந்த ஊரில் கிடா வெட்டி விருந்தளிந்த தனுஷ்!

டார்ஜிலிங்கில் நிலச்சரிவு: 7 பேர் பலி; பலர் மாயம்! - பிரதமர் மோடி இரங்கல்

SCROLL FOR NEXT