தமிழ்நாடு

போடியில் வரலட்சுமி விரதம்: 50 ஆயிரம் வளையல்களால் அலங்காரம்

போடியில் வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு பத்மாவதி தாயாருக்கு 50 ஆயிரம் வளையல்களால் அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது.

DIN

போடி: போடியில் வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு பத்மாவதி தாயாருக்கு 50 ஆயிரம் வளையல்களால் அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது.

ஆடி மாதம் வரலட்சுமி விரத தினத்தை முன்னிட்டு அம்மன் கோயில்களில் வளையல் அலங்காரம் செய்து பூஜை நடத்துவர். போடி அருள்மிகு ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் உள்ள ஸ்ரீ பத்மாவதி தாயாருக்கு 50 ஆயிரத்து ஒரு வளையல்களால் அலங்காரம் செய்யப்பட்டது.

அம்மன், பந்தல், நிலை மாலை, திருவாச்சி ஆகியவை வளையல்களால் அமைக்கப்பட்டிருந்தன. சுமங்கலிகள் நீண்ட ஆயுள் பெறவும், திருமணமாகாத பெண்கள் திருமணமாகவும், குழந்தை பாக்கியம் பெறவும் பெண்கள் வளையல் படைத்து பூஜையில் பங்கேற்றனர்.

அம்மனுக்கு திருமஞ்சனம், மகா தீபாராதனை நடைபெற்றது. பக்தர்களுக்கு மஞ்சள், குங்குமம் , தாலி கயிறு, வளையல் பிரசாதம் வழங்கப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பூங்காற்றுத் திரும்புமா.... மான்யா!

முஸ்லிம் மக்கள்தொகை பெருக்கம் குறித்து அமித் ஷா கருத்து: காங். கடும் கண்டனம்!

எம்ஜிஆர் ரசிகராக ராஜ்கிரண்!

தவெக திண்டுக்கல் தெற்கு மாவட்டச் செயலர் கைது

சிரிக்கும் தும்பைப் பூ... கேப்ரியல்லா!

SCROLL FOR NEXT