சென்னை ராஜாஜி சாலையில் சுதந்திர தின விழாவிற்கான அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
நாட்டில் 75 ஆவது ஆண்டு சுதந்திர தின விழா வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து, மத்திய, மாநில அரசுகள் பல சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றன.
அந்தவகையில், தமிழகத்தில் சுதந்திர தின விழாவையொட்டி, சென்னை ராஜாஜி சாலையில் இன்று அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. ஒத்திகையையொட்டி உழைப்பாளர் சிலை முதல் தலைமைச் செயலகம் வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இன்றைத் தொடர்ந்து ஆகஸ்ட் 11, 13 ஆகிய இரு நாட்கள் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா காரணமாக பொதுமக்கள் யாரும் சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் அனுமதிக்கப்படாத நிலையில் இந்த ஆண்டு சில கட்டுப்பாடுகளுடன் பொதுமக்கள் அனுமதிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | இன்று குடியரசு துணைத் தலைவா் தோ்தல்: எம்.பி.க்கள் வாக்களிக்க நாடாளுமன்றத்தில் ஏற்பாடு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.