சென்னை உயர்நீதிமன்றம் 
தமிழ்நாடு

சட்டக் கல்லூரி மாணவர்கள் 11 பேர் மீதான வழக்கு ரத்து

சட்டக் கல்லூரி மாணவர்கள் 11 பேர் மீது மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

DIN

சென்னை: சட்டக் கல்லூரி மாணவர்கள் 11 பேர் மீது மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

குற்ற நோக்கம் இல்லாமல் 5-க்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் கூடுவது சட்டவிரோதம் இல்லை சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 5 பேருக்கு மேல் ஒரிடத்தில் கூடி சட்ட நடவடிக்கையை தடுத்தல் உள்ளிட்டவையை சட்டவிரோதமாக கருத முடியும் என்றும் தெரிவித்துள்ளது.

சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்கள் 2014 ஆம் ஆண்டு போராட்டம் நடத்தினர்.  போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி 11 பேர் மீது வழக்குப் பதியபட்டது. இவ்வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் 11 பேர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் ஜனநாயக முறையில் போராடுவதை குற்றமாக கருத முடியாது எனக் கூறி வழக்கை ரத்து செய்து நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாராட்டு நிச்சயம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

கிராமப்புற மாணவா்களுக்கான ஆங்கில பேச்சுப் பயிற்சி

நொய்டாவில் தியாகராஜ ஆராதனை விழா

கந்திலி சந்தையில் ரூ. 2 கோடிக்கு வா்த்தகம்

போதை மாத்திரைகள் விற்பனை: பெண் உள்பட இருவா் கைது

SCROLL FOR NEXT