FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மானாமதுரை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் ஆடி வெள்ளி உற்சவம்: பால்குடம், தீ மிதித்து வேண்டுதல் நிறைவேற்றம்

மாரியம்மன் கோயிலில் ஆடி கடைசி வெள்ளி உற்சவத்தை முன்னிட்டு பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பால்குடம் தீச்சட்டி சுமந்து வந்து கோயிலில் தீ மிதித்து வேண்டுதலை நிறைவேற்றினர். 

1 பிப்ரவரி 2024, 3:32 pm IST
மானாமதுரை கன்னார் தெரு மாரியம்மனுக்கு பால்குடம் சுமந்து ஊர்வலமாக வந்த பக்தர்கள்.
பகிர்:

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை கன்னார் தெரு பகுதியில் எழுந்தருளி அருள்பாலிக்கும் மாரியம்மன் கோயிலில் ஆடி கடைசி வெள்ளி உற்சவத்தை முன்னிட்டு பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பால்குடம் தீச்சட்டி சுமந்து வந்து கோயிலில் தீ மிதித்து வேண்டுதலை நிறைவேற்றினர். 

மானாமதுரை கன்னார்தெரு மாரியம்மன் கோயிலில் விஸ்வகர்மா சமூகத்தினர் சார்பில் ஆடி கடைசி வெள்ளி உற்சவ விழா மற்றும் முளைப்பாரி உற்சவ விழா நடைபெற்றது. இதையொட்டி காப்புக்கட்டி விரதம் இருந்து வந்த பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பக்தர்கள் மானாமதுரை வைகையாற்றிலிருந்து பால்குடம் சுமந்தும், கன்னத்தில் அலகு குத்தியும் மேலதாளத்துடன் ஊர்வலமாக கோயிலுக்கு புறப்பட்டு வந்தனர். 

இதையும் படிக்க | எம்.ஜி.ஆர். திறந்துவைத்த கருணாநிதிபுரம்!

Advertisement

Advertisement

மானாமதுரை கன்னார்தெரு மாரியம்மன் கோயிலில் ஆடி கடைசி வெள்ளி உற்சவத்தை முன்னிட்டு பக்தர்கள் அலகு குத்தி தீ மிதித்து வேண்டுதல் நிறைவேற்றினர்.

பின்னர், கோயிலுக்கு எதிரே பரப்பி வைக்கப்பட்டிருந்த தீக் குண்டத்தில் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தீ மிதித்து வேண்டுதல் நிறைவேற்றினர். பல பக்தர்கள் இடுப்பில் குழந்தைகளை கட்டிக்கொண்டு தீ மிதித்தனர். அதன்பின் மாரியம்மனுக்கு அபிஷேகங்கள், ஆராதனைகள் சிறப்பு பூஜைகள் நடந்தது. 

விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று மாரியம்மனை தரிசனம் செய்தனர். கோயிலில் நடந்த அன்னதானத்தில் திரளானோர் பங்கேற்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை விஸ்வகர்மா சமூகத்தினர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments