மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வெள்ளிக்கிழமை காலை 20,000 கன அடியாக உள்ளது.
மேட்டூா் அணையின் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 120 அடியாக இருந்தது. அணைக்கு வியாழக்கிழமை மாலை வினாடிக்கு 22,000 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை 20,000 கன அடியாக உள்ளது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு 22,000 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்படுகிறது.
இதையும் படிக்கலாம் | வாக்காளா் பட்டியல்-ஆதாா்: 37.81 லட்சம் போ் இணைப்பு -தலைமைத் தோ்தல் அதிகாரி தகவல்
கிழக்கு - மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு 400 கன அடியில் இருந்து 600 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணையின் நீா் இருப்பு 93.47 டி.எம்.சி.யாக இருந்தது.
மழை அளவு: 35.80 மி.மீ