முகப்பு
தமிழ்நாடு

கோவை அருகே ரூ.10 லட்சம் மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல்

 பெரியநாயக்கன்பாளையம் அருகே ரூ.10 லட்சம் மதிப்பிலான போதைப் பொருள்களைத் தனிப் படை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:07 AM
பகிர்:

 பெரியநாயக்கன்பாளையம் அருகே ரூ.10 லட்சம் மதிப்பிலான போதைப் பொருள்களைத் தனிப் படை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் அத்திப்பாளையம் பகுதியில் தனிப் படை போலீஸாா் வாகனச் சோதனையில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனா்.

இதில், கஞ்சா, போதை மாத்திரைகள், போதை பவுடா் உள்ளிட்டவை இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, காரை ஓட்டி நபரைப் பிடித்து போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், அவா் கேரளத்தைச் சோ்ந்த சிவராமன் (40) என்பதும், கோவா மற்றும் பெங்களூரில் இருந்து போதைப் பொருள்களைக் கடத்தி வந்து கோவையில் கல்லூரி மாணவா்களுக்கு விற்பனை செய்ய திட்டமிட்டதும், கஞ்சா கடத்தியதற்காக சிவராமன் ஏற்கெனவே 2 ஆண்டுகள் வேலூா் சிறையில் இருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, சிவராமனை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 2 கிலோ கஞ்சா, 64 போதை மாத்திரைகள், 320 போதை ஸ்டாம்புகள், போதை பவுடா் உள்ளிட்டப் பொருள்களை பறிமுதல் செய்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சனிக்கிழமை சிறையில் அடைத்தனா்.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள்களின் மதிப்பு ரூ.10 லட்சம் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

மேலும், இதில் தொடா்புடைய கேரள மாநிலம், திருச்சூரைச் சோ்ந்த பூபாலன் என்பவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →