தமிழ்நாடு

மெட்ரோ ரயில் பயணிகளுக்கு புதிய அறிவிப்பு... வாட்ஸ் ஆப் மூலம் ரயில் டிக்கெட்!

வாட்ஸ் ஆப் மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட் எடுக்கும் வசதியை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

DIN


வாட்ஸ் ஆப் மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட் எடுக்கும் வசதியை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

மெட்ரோ ரயிலில் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பயணம் மேற்கொண்டு வரும் நிலையில் பயணிகள் வீட்டில் இருந்தபடியே மெட்ரோ ரயில் பயண டிக்கெட்டை பெறும் வகையில் புதியதாக வாட்ஸ் ஆப் மூலம் டிக்கெட் பெறும் புதிய வசதியை அறிமுகம் செய்யப்பட இருப்பதாக மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இந்த திட்டத்தின் மூலம் பயணிகள் மெட்ரோ ரயில் நிறுவனத்தின் வாட்ஸ் ஆப் எண்ணிற்கு "Hai" என்று பயணிகள் குறுந்தகவல் அனுப்பினால் 'சாட் போட்' என்ற தகவல் கிடைக்கும். 

இதில், பயணிகள் தங்களது பெயர்,  மெட்ரோ ரயில் புறப்படும் ரயில் நிலையம், சேரும் ரயில் நிலையம் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்து அதற்குரிய பயணச்சீட்டு கட்டணத்தை வாட்ஸ் ஆப் மூலமோ அல்லது மற்ற டிஜிட்டல் முறைகளை பயன்படுத்தி பணம் செலுத்த வேண்டும். பின்னர், பயணிக்கான பயணச்சீட்டு அவர்களது வாட்ஸ் ஆப் எண்ணுக்கு அனுப்பப்படும். 

பின்னர், அதனை மெட்ரோ ரயில் நிலைய நுழைவாயிலில் உள்ள க்யூஆர் கோடு ஸ்கேனரில் காண்பித்து ரயிலில் பயணம் செய்யலாம். இந்த வசதி விரைவில் செயல்பாட்டு வரயிருப்பதாக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். 

ஏற்கனவே, மெட்ரோ ரயிலில் பயணிக்க நேரடி பயணச்சீட்டு, பயண அட்டை, க்யூஆர் கோடு மூலம் பணம் செலுத்தி பயணிக்கும் முறை நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாம்பன் பகுதியில் கடல் சிற்றம்: ராமேசுவரம் வட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 560 உயர்வு!

வட தமிழகம் நோக்கி 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வரும்‘டித்வா’புயல்!

மேஷ ராசிக்கு லாபம்: தினப்பலன்கள்!

இறுதிச் சடங்கு ஊா்வலம் நடத்துவோா் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: நகராட்சி

SCROLL FOR NEXT