தனிப்படை போலீசார் கைது செய்த அஜித்குமார் 
தமிழ்நாடு

மதுரையில் பட்டாகத்தியை சுழற்றி ரீல்ஸ் வெளியிட்ட வாலிபர் கைது!

மதுரையில் பட்டாகத்தியை சுழற்றி ரீல்ஸ் வெளியிட்ட வாலிபரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். 

DIN

மதுரையில் பட்டாகத்தியை சுழற்றி ரீல்ஸ் வெளியிட்ட வாலிபரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். 

மதுரையைச் சேர்ந்த சில இளைஞர்கள் சமூக வலைத்தளங்களில் ஆயுதங்களுடன் விடியோ பதிவிட்டு வந்தனர். இதனடிப்படையில் மதுரையைச் சேர்ந்த அஜித் என்ற இளைஞர் சமீபத்தில் பெரிய வாளுடன் ரீல்ஸ் விடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தார்.

அதில், சினிமா பாணியில் நடனம் ஆடி சட்டையிலிருந்து பட்டாகத்தியை எடுத்து மிரட்டுவது போல் விடியோ இருந்தது.

இதையடுத்து இது தொடர்புடைய அஜித் என்ற வாலிபரை கைது செய்ய வேண்டும் என்று சமூக வலைத்தளத்தில் புகார் எழுந்த நிலையில், அஜித்குமாரை காவலர்கள் தேடிவந்த நிலையில் அவர் தலைமறைவாகினார்.

இந்நிலையில், தனிப்படை போலீசார் அஜித்குமார் பதுங்கி இருக்கும் இடத்தை கண்டறிந்து அவரை கைது செய்தனர்.

அஜித் குமார் மீது கொலை முயற்சி, வழிப்பறி உள்பட 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி!

சொல்லப் போனால்... பஹல்காமிலிருந்து லெவல் கிராசிங் வரை...

தமிழகத்துக்கு மின்-பேருந்துகள்: டாடா மோட்டாா்ஸ் ஒப்பந்தம்

அரையாண்டில் 5% சரிந்த வீடுகள் விற்பனை

மனகஷ்டம் நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT