முகப்பு
தமிழ்நாடு

காஞ்சிபுரத்தில்183 ஏரிகள் 100 சதவிகிதம் நிரம்பின : பொதுப்பணித் துறை

காஞ்சிபுரத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 381 ஏரிகளில் 183 ஏரிகள் 100 சதவிகிதம் நிரம்பின.

Updated On : 11 டிசம்பர் 2022, 9:32 am IST
பகிர்:

காஞ்சிபுரத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 381 ஏரிகளில் 183 ஏரிகள் 100 சதவிகிதம் நிரம்பின.


மாண்டஸ் புயலினால் கடந்த இரு தினங்களாக தமிழகத்தின் பல பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. புயல் கரையை கடந்த பின்பும் தமிழகத்தில் மழை தொடர்ந்து வருகிறது. தமிழகத்தின் 20 மாவட்டங்களில் இன்று (டிசம்பர் 11) மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், காஞ்சிபுரத்தில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள 183 ஏரிகள் 100 சதவிகிதம் நிரம்பியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

காஞ்சிபுரத்தில் 111 ஏரிகள் 75 சதவிகிதம் நிரம்பியுள்ளதாகவும், 62 ஏரிகள் 50 சதவிகிதத்துக்கும் மேலாக நிரம்பியுள்ளதாகவும் பொதுப்பணித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதே போல செங்கல்பட்டு மாவட்டத்திலும் 220 ஏரிகள் 100 சதவிகிதம் நிரம்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments