4 நாள்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 4 நாள்களுக்கு மிதமான மழை தொடர வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 4 நாள்களுக்கு மிதமான மழை தொடர வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: கேரளம் - கா்நாடக கடலோரப் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக புதன்கிழமை (டிச.14) முதல் 4 நாள்களுக்கு தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் சேலசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
சென்னையைப் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
லட்சத்தீவு பகுதிகள், தென் கிழக்குப் பகுதி மற்றும் கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும் என்பதால் அந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.