தங்கம் விலை அதிகரித்துள்ளது: எவ்வளவு தெரியுமா?
சென்னையில் ஆபரணத்தங்கம் தொடர்ந்து 40 ஆயிரத்தைத் தாண்டி விற்பனையாகி வரும் நிலையில், இன்று சவரனுக்கு ரூ.88 அதிகரித்துள்ளது.
சென்னையில் ஆபரணத்தங்கம் தொடர்ந்து 40 ஆயிரத்தைத் தாண்டி விற்பனையாகி வரும் நிலையில், இன்று சவரனுக்கு ரூ.88 அதிகரித்துள்ளது.
தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. ஜூலையில், மத்திய அரசு தங்கத்துக்கான இறக்குமதி வரியை உயர்த்தியது. அதைத் தொடர்ந்து, தங்கம் விலையும் உயர்ந்தது. பின்னா், ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது.
அதன்படி, டிசம்பர் 17-ம் தேதி காலை நிலவரப்படி ஒரு சவரன் தங்கம் ரூ.88 அதிகரித்து, ரூ.40,4480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம் ஒன்றுக்கு ரூ.11 அதிகரித்து ரூ.5,056 ஆக விற்பனையாகிறது.
இதேபோல், வெள்ளி விலையும் அதிகரித்துள்ளது. கிலோவுக்கு ரூ.500 அதிகரித்து ரூ.73,000-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.50 காசுகள் அதிகரித்து ரூ.73.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது
சனிக்கிழமை நிலவரப்படி
தங்கம் கிராம் - ரூ.5,056
தங்கம் ஒரு சவரன் - ரூ.40,448
வெள்ளி கிராம் - 73.00
ஒரு கிலோ வெள்ளி - ரூ.73,000