முகப்பு
தமிழ்நாடு

பார்வையற்றோருக்கான தேசிய தடகளம்: பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு மநீம பாராட்டு!

பார்வையற்றோருக்கான தேசிய தடகளப் போட்டியில் பதக்கம் வென்று சாதித்த தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு மக்கள் நீதி மய்யம் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Updated On : 20 டிசம்பர், 2022 at 3:15 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 4:39 PM

பார்வையற்றோருக்கான தேசிய தடகளப் போட்டியில் பதக்கம் வென்று சாதித்த தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு மக்கள் நீதி மய்யம் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து, மநீம சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

தில்லியில் நடைபெற்ற 22-வது தேசிய பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான தடகளப் போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த நந்தினி நீளம் தாண்டுதலில் தங்கப் பதக்கம், பிரவீன்குமார் ஈட்டி எறிதல், பார்த்திபன் 800 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கங்களை வென்று தமிழகத்துக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

Advertisement

தேசியப் போட்டியில் பதக்கங்கள் வென்று சாதித்த வீரர், வீராங்கனைகளுக்கும், அவர்களை ஊக்குவித்த தமிழ்நாடு அமெச்சூர் பார்வையற்றோர் விளையாட்டுச் சங்கத்துக்கும் மக்கள் நீதி மய்யம் மனமார்ந்தப் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், இன்னும் பல வெற்றிச் சிகரங்களை அடைய வாழ்த்துகிறது என்று தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.