தமிழகத்தில் 10 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த தினசரி பாதிப்பு
தமிழகத்தில் 10 ஆயிரத்துக்கும் கீழ் தினசரி கரோனா பாதிப்பு குறைந்தது.
தமிழகத்தில் 10 ஆயிரத்துக்கும் கீழ் தினசரி கரோனா பாதிப்பு குறைந்தது.
இதுகுறித்து மக்கள்நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழகத்தில் இன்று 9,916 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் சென்னையில் 1,475 பேரும், அதற்கு அடுத்தபடியாக கோவையில் 1,224 பேரும், செங்கல்பட்டில் 983 பேரும், திருப்பூரில் 857 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இதையும் படிக்க- துப்பாக்கிச்சூடு சம்பவம்: இசட் பிரிவு பாதுகாப்பை மறுத்த ஓவைசி
மற்றொருபுறம் மேலும் 21,435 போ் கரோனாவிலிருந்து விடுபட்டு இன்று வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 32 லட்சத்து 04,213-ஆக அதிகரித்துள்ளது. தற்போது மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 1 லட்சத்து 55,329 போ் உள்ளதாக சுகாதாரத்துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 30 போ் பலியாகியதை அடுத்து நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37,696-ஆக அதிகரித்துள்ளது.