FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

அருப்புக்கோட்டை நகராட்சியை பெரும்பான்மையுடன் கைப்பற்றியது திமுக

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகராட்சியின் மொத்தமுள்ள 36 வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் 29 வார்டுகளில் வென்றதன்மூலம் அருப்புக்கோட்டை நகராட்சிமன்றத்தை மீண்டும் திமுக கைப்பற்றியது.

1 பிப்ரவரி 2024, 1:58 pm IST
அருப்புக்கோட்டை நகராட்சியின் முன்னாள் நகர்மன்றத் தலைவர் சிவப்பிரகாசம் திமுக சார்பில் 8வது வார்டில் போட்டியிட்டு வெற்றிபெற்றதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் பெற்றார்.
பகிர்:

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகராட்சியின் மொத்தமுள்ள 36 வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் 29 வார்டுகளில் வென்றதன்மூலம் அருப்புக்கோட்டை நகராட்சிமன்றத்தை மீண்டும் திமுக கைப்பற்றியது.

அருப்புக்கோட்டை நகராட்சியில் மொத்தம் 36 வார்டுகள் உள்ளன. கடந்த 19ம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையடுத்து செவ்வாய்க்கிழமை வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற்றன. 

இதற்கென அறிவிக்கப்பட்டபடி வாக்கு எண்ணும் மையமாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த தேவாங்கர் கலைக் கல்லூரி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு முதலாவதாக தபால் ஓட்டுக்கள் எண்ணும் பணிகள் தொடங்கின.

Advertisement

Advertisement

அதைத்தொடர்ந்து சுமார் நண்பகல் 1 மணி வரை வார்டுவாரியாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்று, உரிய வெற்றி வேட்பாளர்களுக்கு அதிகாரப்பூர்வமாகத் தேர்தல் நடத்தும் அதிகாரி சான்றிதழ்களை வழங்கினார். இதில், திமுக மற்றும் பிற கட்சிகள், சுயேச்சைகளின் வெற்றி விபரம்..

அருப்புக்கோட்டை நகராட்சி = மொத்தம் 36 வார்டுகள்.

திமுக கைப்பற்றியது = 29 வார்டுகள்.

அதிமுக கைப்பற்றியது = 3 வார்டுகள்.

மதிமுக    கைப்பற்றியது = 1, 

பாஜக     கைப்பற்றியது = 1,

சிபிஎம் கைப்பற்றியது = 1,

சுயேச்சை கைப்பற்றியது = 1.

திமுக பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றதையடுத்து திமுக தொண்டர்கள் திரளாகக்கூடி,பட்டாசு வெடித்து, விதவிதமான மேளங்கள் இசைத்து,ஆடிப்பாடிக் கொண்டாடினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments