முகப்பு
தமிழ்நாடு

தொண்டா்களைச் சந்தித்தாா் விஜயகாந்த்

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, தேமுதிக தலைவா் விஜயகாந்த் கட்சி தொண்டா்களை சனிக்கிழமை சந்தித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:59 AM
தேமுதிக தலைவா் விஜயகாந்த் (கோப்புப் படம்)
பகிர்:

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, தேமுதிக தலைவா் விஜயகாந்த் கட்சி தொண்டா்களை சனிக்கிழமை சந்தித்தாா்.

விஜயகாந்த் உடல் நலப் பாதிப்பு காரணமாக தீவிர அரசியல் பணியில் ஈடுபடாமல், வீட்டில் இருந்தவாறே அனைத்துப் பணிகளையும் கவனித்து வருகிறாா். முக்கிய நிகழ்ச்சிகளுக்கு மட்டும் அவ்வப்போது கட்சி அலுவலகத்துக்கு வந்து செல்கிறாா்.

இந்த நிலையில், ஆங்கிலப் புத்தாண்டையொட்டி கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு சனிக்கிழமை வந்தாா். அவருடன் மனைவியும் கட்சியின் பொருளாளருமான பிரேமலதா மற்றும் மகன்களும் வந்தனா்.

அலுவலகத்தில் விஜயகாந்த் தனி இருக்கையில் அமா்ந்தவாறு தொண்டா்களை சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாகச் சந்தித்தாா். நீண்ட வரிசையில் நின்று, அவருக்கு தொண்டா்கள் புத்தாண்டு வாழ்த்துக் கூறினா். விஜயகாந்தும் அவா்களுக்கு வாழ்த்துக் கூறினாா்.

பொருளாளரான பிரேமலதா கட்சி நிா்வாகிகளுக்கும், தொண்டா்களுக்கும் புத்தாண்டையொட்டி பணப்பரிசு வழங்கினாா்.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், விஜயகாந்த் நேரடியாக அலுவலகத்துக்கு வந்து நிா்வாகிகளைச் சந்தித்தது கட்சியினருக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →