தமிழ்நாடு

புதுக்கோட்டை சிறுவன் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு: முதல்வர்

DIN


துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்த புதுக்கோட்டை சிறுவன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலையில் காவல் துறை பயிற்சியின்போது துப்பாக்கி குண்டு பாய்ந்து சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த சிறுவன் புகழேந்தியின் மரணத்திற்கு நீதி கேட்டு அப்பகுதி மக்கள் இரண்டு மணிநேரமாக சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், திருச்சி - புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். உயிரிழந்த சிறுவனுக்கு ஞாயம் கிடைக்க வேண்டும்.

இது தொடர்பாக நீதிவிசாரணை நடத்த வேண்டும். சிறுவன் குடும்பம் மிகவும் பின்தங்கிய ஏழ்மையான குடும்பம் என்பதால் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

மேலும் இதுபோன்ற சம்பவம் தொடராமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். 

உயிரிழந்த புதுக்கோட்டை சிறுவன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT