முகப்பு
தமிழ்நாடு

வெள்ளி, சனி, ஞாயிறுகளில் வழிபாட்டுத் தலங்களில் அனுமதி இல்லை

தமிழகத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு தினங்களில் வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:02 AM
கோப்புப்படம்
பகிர்:

தமிழகத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு தினங்களில் வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நாடு முழுவதும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், தமிழகத்திலும் கரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகளை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

இந்த புதிய கட்டுப்பாடுகள் நாளை முதல் அமலுக்கு வருகின்றன. நாளை(ஜன.6) முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. ஞாயிறுகளில் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. 

மேலும், தமிழகத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு தினங்களில் வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →