புதிதாக 1.68 லட்சம் பேருக்கு கரோனா; 277 பேர் பலி
நாட்டில் நேற்று ஒரே நாளில் புதிதாக 1.68 லட்சம் பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. ஒரே நாளில் கரோனா பாதித்தவர்களில் 277 பேர் பலியாகினர்.
புது தில்லி: நாட்டில் நேற்று ஒரே நாளில் புதிதாக 1.68 லட்சம் பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. ஒரே நாளில் கரோனா பாதித்தவர்களில் 277 பேர் பலியாகினர்.
நாட்டில் இன்று காலை நிலவரப்படி கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 8,21,446 பேர் ஆக உள்ளது. நாள்தோறும் கரோனா பாதிப்பு உறுதியாகும் விகிதம் 10.64 சதவீதமாக உள்ளது.
இதையும் படிக்க.. இனி தமிழில் தேர்வு நடத்தப்படும்: டிஎன்பிஎஸ்சி தலைவர்
கரோனா பாதித்து சிகிச்சைபெற்று வந்தவர்களில் நேற்று ஒரே நாளில் 69,959 ஆக உள்ளது. நாட்டில் ஒமைக்ரான் பாதிப்பு 4,461 ஆக அதிகரித்துள்ளது.