பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொண்டார் ஓபிஎஸ்!
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் முன்னெச்சரிக்கை தவணை கரோனா தடுப்பூசியை இன்று செலுத்திக் கொண்டார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் முன்னெச்சரிக்கை தவணை கரோனா தடுப்பூசியை இன்று செலுத்திக் கொண்டார்.
தமிழகத்தில் இரண்டு தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட முதியவர்கள், இணை நோயுள்ளவர்கள், முன்களப் பணியாளர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் முன்னெச்சரிக்கை தவணை கரோனா தடுப்பூசியை இன்று செலுத்திக் கொண்டார்.
Advertisement
Advertisement
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் இன்று முன்னெச்சரிக்கை தவணை கரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டது குறிப்பிடத்தக்கது.