எடப்பாடி பழனிசாமி (கோப்புப் படம்) 
தமிழ்நாடு

எடப்பாடி பழனிசாமி சம்பந்திக்கு பணம் கேட்டு கொலை மிரட்டல்: 3 பேர் கைது 

பெருந்துறையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சம்பந்திக்கு, பணம் கேட்டு கொலை மிரட்டல் செய்த மூவரை, பெருந்துறை போலீசார் கைது செய்து விசாரித்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர்.

DIN


பெருந்துறை: பெருந்துறையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சம்பந்திக்கு, பணம் கேட்டு கொலை மிரட்டல் செய்த மூவரை, பெருந்துறை போலீசார் கைது செய்து விசாரித்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

பெருந்துறை, சென்னிமலை ரோடு, உழவன் நகரில் குடியிருப்பவர் சுப்பிரமணியன். இவர், தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சம்பந்தி ஆவர். இவருக்கு, கடந்த 2021 டிசம்பர் மாதம் 26 ம் தேதியில் இருந்து தொடர்ந்து ஒரே செல் போனில், பல முறை பணம் கேட்டு கொலை மிரட்டல் வந்தது. 

     இதுகுறித்து, பெருந்துறை காவல் துறையில் சுப்பிரமணியன் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில், காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, நேற்று (வெள்ளிக்கிழமை), சத்தியமங்கலம், பன்னாரி ரோடு, உதயம் நகரைச் சேர்ந்த ரங்கசாமி மகன் பால்ராஜ்,60. சத்தியமங்கலம், தடத்தபள்ளி, இக்கரை, வெள்ளியம்பாளையம்புதூரைச் சேர்ந்த  சந்திரன்,48. சத்தியமங்கலம், ராஜீவ் நகரைச் சேர்ந்த நடராஜன் மகன் சீனிவாசன்,41, ஆகியோரை கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய தலை மறைவாக உள்ள இருவரை தேடி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனுஷ் 54: படப்பிடிப்பு நிறைவு!

புதிய வாக்காளர் படிவத்தை நீக்கப்பட்ட வாக்காளர்கள் பயன்படுத்தலாமா?

வங்கதேசம்: வன்முறையில் 7 வயது சிறுமி உயிருடன் எரித்துக் கொலை!

பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட டிச.23 முதல் அனுமதி!

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

SCROLL FOR NEXT