இருசக்கர வாகனத்தில் இருந்து மயங்கி விழுந்த பெண்: ஒடிவந்து முதலுதவி அளித்த தமிழிசை
இருச்சகர வாகனத்தில் சென்ற வயதான பெண் ஒருவர் திடீரென மயங்கி கீழே விழுந்தவருக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் முதலுதவி அளித்து அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
புதுச்சேரி: இருச்சகர வாகனத்தில் சென்ற வயதான பெண் ஒருவர் திடீரென மயங்கி கீழே விழுந்தவருக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் முதலுதவி அளித்து அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வீட்டின் தெருவில், இன்று வெள்ளிக்கிழமை காலை இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த ஒரு வயதான பெண் திடீரென மயங்கி கீழே விழுந்து காயமடைந்தார்.
இதனை அறிந்த தமிழிசை சௌந்தரராஜன் உடனடியாக வந்து அந்த பெண்ணுக்கு முதலுதவி அளித்து, பின்னர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறினார்.
துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு அங்கு இருந்தவர்கள் நன்றி தெரிவித்தனர்.