பென்னி குயிக் பிறந்தநாள்: ஆட்சியர், எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை
முல்லைப் பெரியாறு அணை கட்டிய கர்னல் ஜான் பென்னி குயிக் 181 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் சனிக்கிழமை மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
கம்பம்: முல்லைப் பெரியாறு அணை கட்டிய கர்னல் ஜான் பென்னி குயிக் 181 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் சனிக்கிழமை மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
தேனி மாவட்டம் லோயர் கேம்ப்பில் முல்லைப் பெரியாறு அணை கட்டிய ஆங்கிலேய பொறியாளர் கர்னல் ஜான்பென்னிகுயிக் 181 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
முல்லைப் பெரியாறு அணை கட்டிய இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஆங்கிலேய பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுயிக் மணிமண்டபத்தில் இன்று அரசு விழாவாக கொண்டாடப்பட்டது.
இதையும் படிக்க.. உடல்நிலை பாதிக்கப்பட்ட சிறுவனுக்காக பள்ளிச் செல்லும் அவதார் ரோபோ
கரோனா தொற்று பரவல் காரணமாக அரசு விழாவில் வேறு எந்த நிகழ்வுகளும் அனுமதிக்கப்படவில்லை.
மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளிதரன் தலைமை தாங்கினார், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கம்பம் என்.ராமகிருஷ்ணன், ஆண்டிபட்டி ஆ.மகாராஜன், பெரியகுளம் கே. எஸ். சரவணகுமார், வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தங். தமிழ்ச்செல்வன் ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். ஏற்பாடுகளை பொதுப்பணித் துறையினர் செய்திருந்தனர்.