தமிழ்நாடு

அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கருக்கு மீண்டும் கரோனா

DIN

தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா பாதிப்பை அடுத்து அவர் அரியலூரில் உள்ள தனது வீட்டில் மருத்துவர்களின் அறிவுரையின்படி தனிமைப்படுத்திக்கொண்டார்.

சமீபத்தில் பெரம்பலூர் எம்.எல்.ஏ. பிரபாகரனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது அரியலூர் மாவட்ட தி.மு.க. செயலாளரும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சருமான எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், உடல் சோர்வு, சளி, காய்ச்சலைத் தொடர்ந்து, கடும் தொண்ைட வலி ஏற்பட்டதால் சோதனை செய்து கொண்டேன். இதில் மீண்டும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சமீபத்தில் என்னை சந்தித்தவர்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கஞ்சா கடத்தியவா் கைது

ரயிலில் இருந்து தவறி விழுந்த இளைஞா் பலி

காா் வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 12 லட்சம் மோசடி

பா்கூா் வட்டத்தில் வறட்சியால் மா சாகுபடி பாதிப்பு

தைலாபுரம் உபகார மாதா ஆலயத்தில் அசன விழா

SCROLL FOR NEXT