ஜெ.ராதாகிருஷ்ணன் (கோப்புப் படம்) 
தமிழ்நாடு

தமிழகத்தில் கரோனா பரவல் குறைந்து வருகிறது: ராதாகிருஷ்ணன்

டெல்டா, ஒமைக்ரான் பரவலைத் தடுக்க போர்க்கால அடிப்படையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்: ராதாகிருஷ்ணன் விளக்கம்

DIN


தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோர் விகிதம் குறைந்து வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், கரோனா பரவலைக் கட்டுப்படுத்தவே முழு ஊரடங்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) அமல்படுத்தப்பட்டுள்ளது.

டெல்டா, ஒமைக்ரான் பரவலைத் தடுக்க போர்க்கால அடிப்படையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதனால் தமிழகத்தில் தற்போது கரோனா பரவல் குறைந்துள்ளது.

கடந்த 15-ஆம் தேதி 30 சதவிகிதமாக இருந்த பாதிப்பு தற்போது 20 சதவிகிதமாக குறைந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. 

இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் இறப்பு விகிதம் மிக குறைவாக உள்ளது. டிசம்பரில் 100 பேரில் ஒருவர் உயிரிழந்த நிலையில், தற்போது 1000 பேரில் ஒருத்தர் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வர வேண்டும். மக்கள் பாதுகாப்பாக இல்லாவிட்டால் கரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர இயலாது. பல்வேறு இணை நோய் உள்ளவர்கள் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

அச்சுறுத்தும் அழியாத ரசாயனங்கள்

விபத்து எழுப்பும் வினாக்கள்!

SCROLL FOR NEXT