கோப்புப்படம் 
தமிழ்நாடு

இலங்கை சிறையிலிருந்து 56 தமிழக மீனவர்கள் விடுதலை

இலங்கை சிறையிலிருந்த தமிழக மீனவர்கள் 56 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.

DIN

இலங்கை சிறையிலிருந்த தமிழக மீனவர்கள் 56 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.

இலங்கை கடற்பகுதியில் மீன்பிடித்ததாகக் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம், தூத்துக்குடியைச் சேர்ந்த 56 மீனவர்களை விடுதலை செய்ய இலங்கை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த டிச.18, 20 ஆம் தேதி தமிழக மீனவர்களைக் கைது செய்து இலங்கை கடற்படையினர் விசாரணை செய்து வந்த நிலையில் அவர்களை விடுதலை செய்யக்கோரி பல்வேறு அரசியல் தலைவர்களும், மீனவ சங்கத்தினரும் தொடர் அழுத்தம் கொடுத்து வந்தனர். 

இந்நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி அவர்களை விடுவிக்க உத்தரவு பிறப்பித்ததுடன் அவர்கள் பயன்படுத்திய படகுகளின் உரிமையாளர்கள் வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் தெரிவித்தார்.

முன்னதாக, தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடும் இலங்கை அரசைக் கண்டித்து வரும் பிப்ரவரி.2 ஆம் தேதி ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக  அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குழந்தை இல்லாதவர்களுக்கு கடைசி வாய்ப்பா IVF சிகிச்சை முறை? | மருத்துவர் ஆலோசனைகள்!

தஞ்சாவூர் அருகே மின்சாரம் பாய்ந்து கணவன்-மனைவி பலி

மேரிலிண் மன்ரோ லுக்... ஓவியா!

சலம்பல பாடல் புரோமோ!

2-வது போட்டியில் மே.இ.தீவுகள் வெற்றி; சமனில் டி20 தொடர்!

SCROLL FOR NEXT