கோட்சே பெயரை பயன்படுத்த காவல்துறை எதிர்ப்பு...வாக்குவாதத்தில் ஈடுபட்ட மா. கம்யூனிஸ்ட் கட்சியினர்
உறுதிமொழியேற்பில் கோட்சே பெயரையும் இந்து மதவெறி வார்த்தையும் பயன்படுத்த காவல்துறை எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
நாடு முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மகாத்மா காந்தியின் 75-வது நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, சென்னை மெரீனா கடற்கரையில் காந்தியின் திருவுருவப்படத்திற்கு ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இந்நிலையில், கோவையில் காந்தி நினைவு நாளை அனுசரிக்கும் விதமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. அதில், உறுதிமொழியேற்பில் கோட்சே பெயரையும் இந்து மதவெறி வார்த்தையும் பயன்படுத்த காவல்துறை எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க | காந்தி நினைவு நாள்: ஆளுநர், முதல்வர் மரியாதை
Advertisement
Advertisement
இதையடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், தந்தை பெரியார் திராவிட கழகத்தினர், விசிகவினர் உள்ளிட்ட அமைப்பினர் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.